திங்கள், 15 ஜூன், 2015

வீடு

                  நான் அஞ்சாவது படிச்சுட்டு இருக்கும் போது எங்க அப்பா எங்களுக்குனு ஒரு சொந்த வீடு கட்ட ஆரம்பிச்சாங்க. அதுக்கு முன்னாடி வர நாங்க எல்லாரும் கூட்டு குடும்பமா தான் இருந்தோம். சொந்தத்துக்குள்ள அடிக்கடி சண்ட வர ஆரம்பிச்சதும் இப்டியே விட்டா சொந்தமே இல்லாம போயிரும். அதுக்கு பதிலா நாம தனியா வீடு கட்டி குடி போயட்டோம்னா மிஞ்சி இருக்க கொஞ்ச பாசமாவது இருக்கும்னு என் அம்மா அக்கா என்ன தங்கச்சிய கூட்டிகிட்டு ஏதோ ஒரு நம்பிக்கைல கிளம்பி வந்துட்டாங்க.