புதன், 7 ஜூன், 2017

அரசி

அப்பத்தா இன்னும் எவ்வளோ நேரம் ஆகும் சொல்லுபத்தா. டேய் ராசையா கொஞ்ச நேரம் தொனதொனங்காம இருக்கியா அஞ்சு மணி வண்டி வார நேரந்தான் இந்தா இப்ப வந்துரும் இரு. போபுத்தா அப்பவே புடுச்சு நீ இப்புடி தான் சொல்லிட்டு இருக்க இன்னுங் காணும். அந்தா வந்துருச்சு ராசா எந்திரி என்று தன் மடியில் இருந்த பேரனை தூக்கி நிறுத்தினாள் அரசி

சனி, 11 ஜூலை, 2015

ராஜமௌலி (இயக்குனர்)



             பிரமாண்டத்தின் உச்சம் ,இந்தியாவின் மிக பெரிய பட்ஜெட் திரைப்படம், பிரமாண்ட நட்சத்திர பட்டாளம் என்ற பெயர்களை தாங்கி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பாகுபலி. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் மொத்த எதிர்பார்ப்பையும் இந்த படம் தூண்டியிருக்கும் நிலையில் இயக்குனர் ராஜமௌலி குறித்து தினகரன் வெள்ளி மலரில் வெளிவந்திருக்கும் கட்டுரை அவர் மீதுள்ள மரியாதையை பெருமடங்கு கூட்டியுள்ளது. அந்த கட்டுரை உங்களுக்காக...

திங்கள், 15 ஜூன், 2015

வீடு

                  நான் அஞ்சாவது படிச்சுட்டு இருக்கும் போது எங்க அப்பா எங்களுக்குனு ஒரு சொந்த வீடு கட்ட ஆரம்பிச்சாங்க. அதுக்கு முன்னாடி வர நாங்க எல்லாரும் கூட்டு குடும்பமா தான் இருந்தோம். சொந்தத்துக்குள்ள அடிக்கடி சண்ட வர ஆரம்பிச்சதும் இப்டியே விட்டா சொந்தமே இல்லாம போயிரும். அதுக்கு பதிலா நாம தனியா வீடு கட்டி குடி போயட்டோம்னா மிஞ்சி இருக்க கொஞ்ச பாசமாவது இருக்கும்னு என் அம்மா அக்கா என்ன தங்கச்சிய கூட்டிகிட்டு ஏதோ ஒரு நம்பிக்கைல கிளம்பி வந்துட்டாங்க.

திங்கள், 13 ஏப்ரல், 2015

கவிதை


உயர்ந்த மாளிகையில்

வெண்ணிற பட்டாடையில்

மின்னிய வெள்ளி ஜரிகைக்குள் 

சிதறிய பூக்கள்

தவமிருந்தாலும் தொடமுடியாத

சாயம் பூசிய அவள் உதட்டை, பிதுக்கியபடி

வைரவளையல்கள் தேடியவளை 

தலையில் தட்டி தள்ளினார்

ரேசன் கடை வரிசையில் நின்றவர்

" மிடில் கிளாஸ் மனது "

                                                                             - சங்கர்தயா

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

சங்கதாரா



                 பொன்னியின் செல்வன் படித்த அனைவருக்கும் பொதுவாக தோன்றும் ஒரே கேள்வி ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பது தான். எனக்கு அதில் ஆர்வம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அதற்கான தேடுதல் வேட்டையாக கூகிளில் நுழைந்த பிறகு எனக்கு அறிமுகமான புத்தகம் தான்  சங்கதாரா.

ஞாயிறு, 20 ஜூலை, 2014

ஃபேஸ்புக் தீம் மாற்றம் செய்வது எப்படி?

               உங்களில் பலருக்கு அதே " ஊதா கலரு ரிப்பன் " ஃபேஸ்புக் தீம் பார்த்து பார்த்து அலுத்து விட்டதா?  அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு.

செவ்வாய், 15 ஜூலை, 2014

பொன்னியின் செல்வன் ( பகுதி 4 )


                                   பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் குறித்த எனது இறுதி பதிவு.

         வானதி:

                                    குந்தவையின் உயிருக்கு உயிரான தோழி, அருள்மொழியை பைத்தியமாக காதலித்தாள். காற்றுக்கு வலித்து விடுமோ என்று மௌனத்தை மட்டுமே அதிகம் பேசுபவள். தாயில்லாத பெண், தன்னை தாய் போல் பார்த்துகொண்ட குந்தவையை உயிரினும் மேலாக மதித்தாள். பிறந்ததில் இருந்து ஏமாற்றத்தை மட்டுமே அதிகம் சந்தித்தவள், அதனால் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருந்தாள்